×

போர் முடிவுக்கு வந்ததாக பொய் பிரசாரம்: இஸ்ரேல் அதிபர் ஆவேசம்


டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிணைய கைதிகள் விவகாரம், காசாவில் பாலஸ்தீனிய அப்பாவி மக்கள் பலி போன்றவை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என்று இஸ்ரேல் அறித்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகளை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அப்போது கூறுகையில், ‘ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளோம்.

இஸ்ரேல் படைகள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. ஹமாசுக்கு எதிரான போரை நிறுத்த மாட்டோம். இறுதிவரை போர் நடக்கும். வரும் நாட்களில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடையும். இலக்கை அடையும் வரை போருக்கு முடிவு கிடையாது. ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை, ராணுவ நடவடிக்கை இல்லாமல் விடுவிக்க முடியாது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களை குறைக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதை தடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். பொதுமக்களை ஹமாஸ் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது’ என்றார்.

The post போர் முடிவுக்கு வந்ததாக பொய் பிரசாரம்: இஸ்ரேல் அதிபர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : President of ,Israel ,Tel Aviv ,Hamas ,Gaza ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...